Main Menu

100க்கும் மேற்பட்ட அல்-ஷபாப் போராளிகள் சோமாலியாவில் சுட்டுக்கொலை

மத்திய ஹிரான் பகுதியில், அமெரிக்கப் படைகளின் ஆதரவைப் பெறும் சோமாலி தேசிய இராணுவம் (எஸ்என்ஏ) கடந்த மூன்று நாட்களாக நடத்திய நடவடிக்கைகளில் 100க்கும் மேற்பட்ட அல்-ஷபாப் போராளிகளை சுட்டுக்கொன்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

‘எஸ்என்ஏ தலைமையிலான இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் விமான ஆதரவு உதவியது’ என்று அரசுக்கு சொந்தமான சோமாலி தேசிய தொலைக்காட்சி பகிர்ந்துள்ள அறிக்கை கூறியது.

ஹைரான் மற்றும் அண்டை பிராந்திய கல்குடுட் பகுதிகள் அரசாங்க ஆதரவுடைய கிளான் மிலிஷியா மற்றும் அல்-ஷபாப் போராளிகளுக்கு இடையேயான பல வார மோதல்களின் மையமாக மாறியுள்ளன.

திங்களன்று அரச தொலைக்காட்சியும் ஹிரான் பகுதியில் குறைந்தது 54 தீவிரவாதிகளை ராணுவம் கொன்றதாக செய்தி வெளியிட்டது.

ஒரு நாள் முன்பு, குலப் போராளிகளுடன் கூட்டு நடவடிக்கையில் 75க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் கூறியது.

பகிரவும்...