Main Menu

பொரிஸ் ஜோன்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை

இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, இந்தியா, இங்கிலாந்து நட்பை அடுத்த பத்தாண்டுகளுக்கு எவ்வாறு முன்னோக்கி கொண்டுச் செல்வது என்பது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கொரோனாவுக்கு எதிராகவும் சூழல் தொடர்பான போராட்டத்திலும் இணைந்து செயற்பட இரு தலைவர்களும் உறுதி எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

வர்த்தகம், முதலீடு , பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் பொரிஸ் ஜோன்சனுடன் இணக்கமான முறையில் உரையாடல் நிகழ்த்தப்பட்டதாக பிரதமர் மோடி தனது ருவிட்டர் பதிவில் பதிவேற்றியுள்ளார்.

பகிரவும்...