Main Menu

வீட்டிலிருந்து காற்பந்து போட்டியை ரசித்த நால்வர் உயிரிழப்பு – 10 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குடும்பத்தினரும் அவர்களின் நண்பர்களும் காற்பந்து விளையாட்டைக் காண வீட்டில் ஒன்றுகூடியபோது அங்கு நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகம் சத்தம் கேட்டவுடன் அயலவர்கள் அங்கு விரைந்து சென்றதுடன், பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சந்தேக நபர் அந்த இடத்திலிருந்து தப்பியோடியுள்ள நிலையில், கண்காணிப்புக் கமராவில் அந்தச் சம்பவம் பதிவாகியுள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

பகிரவும்...