Main Menu

மத்திய அமைச்சர்கள் தரக்குறைவான அரசியல் செய்கிறார்கள் – அரவிந் கெஜ்ரிவால்

குடிநீரை வைத்து மத்திய அமைச்சர்கள் தரங்குறைவான அரசியல் செய்கிறார்கள் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து  இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள அவர், மத்திய அமைச்சர்கள் தரங்குறைவான அரசியல் செய்கிறார்கள். டெல்லி குடிநீர் மிகமோசமாக இருப்பதாக கூறி மக்களிடம் பீதியை கிளப்புகிறார்கள்.

டெல்லி குடிநீர் குறித்து குடிநீர் வாரியம் ஏற்கெனவே சோதனை செய்துள்ளது. பல பகுதிகளில் உள்ள மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில் 1.5 சதவீதம் அளவுக்கே தண்ணீர் மாசு இருப்பதாக தெரியவந்தது.

இவர்கள் வெறும் 11 மாதிரிகளை வைத்துக் கொண்டு டெல்லி தண்ணீர் பற்றி மக்களிடம் பீதி கிளப்புகிறார்கள். உலக சுகாதார நிறுவனம் 10 ஆயிரம் பேருக்கு ஒன்று என்ற அடிப்படையில் மாதிரி எடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

பல ஐரோப்பிய நாடுகளை விடவும் இங்கு தண்ணீர் மோசமானதாக இல்லை. இதனை மத்திய அமைச்சர்களான கஜேந்திர சவுகான், ஹர்ஷ வர்த்தன், ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...