Main Menu

விஜய் மல்லையாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை விற்க அனுமதி..

லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை, அவருக்கு கடன் வழங்கிய வங்கிகள் விற்று பணம் திரட்டிக் கொள்ளலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு வங்கிகளுக்கு சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு லண்டனுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கான வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில், மும்பையில் உள்ள சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு நீதிமன்றம், கடன் கொடுத்த வங்கிகளின் மனுவை விசாரித்து மல்லையாவின் சொத்துகளை விற்று பணம் திரட்ட அனுமதியை வழங்கி உள்ளது.

பகிரவும்...