Main Menu

விஜய்யின் இல்லத்தில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

பனையூரில் உள்ள விஜய்யின் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) வருமான வரித்துறை அதிகாரிகள்  மீண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மாஸ்ரர் படத்திற்கு கிடைத்த சம்பளம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘பிகில்’ படத்திற்காக பெற்ற சம்பளம் குறித்தும் சொத்து மதிப்புகள் குறித்தும் பெப்ரவரி 5ஆம் திகதி நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் சொத்து முதலீடு குறித்தும் நடிகர் விஜய் மற்றும் மனைவி சங்கீதா இருவரிடமும் வருமான வரி அதிகாரிகள், 24 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அந்த சமயத்தில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்., உரிமையாளர்கள் அலுவலகம், வீடு மற்றும் திரையரங்கிலும் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மூவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பி அதிகாரிகள் விசாரித்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் ‛மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமார் வீட்டில், வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையிலேயே இன்று மீண்டும் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பகிரவும்...