Main Menu

தேர்தலில் போட்டியிடலாம்: பிள்ளையானுக்கு அனுமதி?

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கான உரிய நடவடிக்கையை செய்யுமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இன்று (வியாழக்கிழமை) சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் கட்டளையிட்டுள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் 25 திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம், தேவாலயம் ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட 5 பேரை சந்தேகத்தில் 2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் 11 ஆம் திகதி கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சி.சந்திரகாந்தன் சிறையில் இருந்து போட்டியிடுவதற்காக சிவில் நீதிமன்றில் அனுமதியைக் கோரியிருந்தார். இதனையடுத்து இன்று சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் வழக்கை பரீசிலனைக்கு எடுத்து கொண்டார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று முதல் வரும் 19ஆம் திகதி வரையான காலத்திற்குள் வேட்பு மனுத்தாக்கலை செய்வதற்காக அனுமதியை வழங்கியதுடன் இந்த வேட்பு மனுத் தாக்குதலை சிறைச்சாலையில் மேற்கொள்ளுமாறும் அதற்கான உரிய நடவடிக்கையை சிறைச்சாலை அத்தியட்சகர் மேற்கொள்ளுமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.

பகிரவும்...