Main Menu

வவுனியாவில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரி வவுனியாவின் பல்வேறு இடங்களில் கையெழுத்துப்போராட்டம் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்ப்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் காலை 8.30 மணிக்கு வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியிலும் பின்னர் இலுப்பையடி உட்பட நகரின் சிலபகுதிகள், செட்டிகுளம் போன்ற பகுதிகளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.ஶ்ரீதரன், எம்.எ. சுமந்திரன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம்,வாலிபர் முண்ணனி தலைவர் கி.சேயோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பகிரவும்...