Main Menu

யாழ். பல்கலையின் பெண் விரிவுரையாளர் யானை தாக்கி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் கொழும்பு, களனிய பகுதியை சேர்ந்த தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான காயத்திரி டில்ருக்சி (வயது-32) என்பவரே இவ்வாறு யானையால் தாக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை)விரிவுரையாளர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் அப்பகுதியில் நடமாடியுள்ளனர். இதன்போது யானையை அவதானித்த இருவரும் வெவ்வேறு திசைக்கு ஓடியுள்ளனர். இதன்போதே ஒருவரை யானை  தாக்கியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுபதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழதுள்ளார்.

பகிரவும்...