Main Menu

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வி அமைச்சு

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறவுள்ள திகதி குறித்த அறிவிப்பு சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தீர்மானமிக்க கலந்துரையாடலின் பின்னர் கல்வியமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய க.பொ.த. உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளன.

அத்தோடு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

2020 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 7ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. எனினும் கொரோனா அச்சம் காரணமாக பரீட்சை பிற்போடப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து,  கொழும்பு மற்றும் வெளிப்பிரதேச மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் இதுதொடர்பாக ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு, பரீட்சையை நடத்துவது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டு 10ஆம் திகதி அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்திருந்தார்.

எனினும் அன்றைய தினமும் பரீட்சை திகதி குறித்து அறிவிக்கப்படாத நிலையில், இன்று மீண்டும் கல்வி அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...