Main Menu

யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்களை முன்வருமாறு கோரியும் இன்று (சனிக்கிழமை ) கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னேடுக்கப்பட்டது .

யாழ் . மத்திய பேருந்து நிலையத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் காலை 10 மணியளவில் நடந்த இந்த போராட்டம் ஆரம்பமானது . மண்ணெண்ணெய் , பெற்றோல் , சமையல் எரிவாயு , பாண் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து போராட்டம் இடம்பெற்றது.

மேலும் போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் .

பகிரவும்...