Main Menu

யாழில் இன்று நடந்த பயங்கரம் – துரத்தித் துரத்தி வாள்வெட்டு

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து மூவர் மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.   குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையில் இன்று  மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த நிலையில் அவர்களை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் துரத்தி வந்த நால்வர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.  தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று பேர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  நாடு தழுவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இந்த மோசமான சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பகிரவும்...