Main Menu

முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை

யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்றுப் பதிவு செய்யப்பட்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட 144 பேரில்  முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் 40 பேருக்கு முதற்கட்டமாக வாழ்வாதார உதவி திட்டங்களை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமாநாதன்  நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று (19) மாலை முன்னாள் போராளிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

ஒரு பயனாளிக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் 40 பேருக்குத் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உபகரணங்கள் மற்றும் பொருள் கொள்வனவிற்காக  விசேடமாக குறித்த  நிதி  வழங்கப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

இதன் போது முன்னாள் போராளிகளோடு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வழங்கப்படும் நிதிகளை உரிய முறையில் தொழில் நடவடிக்கைகளுக்காக மூலதன முதலாக பயன்படுத்திச் சிறப்பான வாழ்க்கையை முன்னெடுக்குமாறும் குறிப்பிட்டார்.

பத்து வருடங்களாக எவ்விதமான ஊக்குவிப்புக்களும் வழங்கப்படாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் தொழிலை மேற்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டமை  பாராட்டத்தக்கது எனவும் முன்னாள் போராளிகள் மீதான கரிசனைக்கு நன்றி தெரிவித்திருந்ததோடு தொடர்ச்சியாக தமது தொழில் செயற்பாடுகளுக்காக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தாமும் கை கோர்த்துப் பயணிக்கத் தயார் எனவும் இதன் போது முன்னாள் போராளிகள் சார்பாகக் கருத்துக்களைத்  தெரிவித்திருந்தனர்.

பகிரவும்...