Day: May 20, 2019
வாடகை மகிழுந்து சாரதிகள் ‘நத்தை’ ஆர்பாட்டம்
இன்று திங்கட்கிழமை காலை முதல், வாடகை மகிழுந்து சாரதிகள் ‘நத்தை’ ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடகை மகிழுந்து சாரதிகள், நோயாளர் காவு வண்டி, பாடசாலை வாகன சாரதிகள் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘நத்தை’ ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர். வீதிகளை வாகனங்களுடன் முற்றுகையிட்ட சாரதிகள், மிகமேலும் படிக்க...
அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டு தாக்குதல்!
நேற்று ஞாயிற்றுக்கிழமை Villejuif இல் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தாக்குதல்தாரி அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டுள்ளான். Villejuif இல் உள்ள வீதி ஒன்றில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவன், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றை வெளியேமேலும் படிக்க...
ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை
துபாயில் உள்ள இந்திய தொண்டு நிறுவனம் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு பலருக்கு இப்தார் விருந்தளித்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபாயில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் இந்தியாவை சேர்ந்த ஜோகிந்தர் சிங் சலாரியா என்பவர் ‘பெஹல்மேலும் படிக்க...
இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு- எடப்பாடி பழனிசாமி
பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என கூறுவது கருத்து திணிப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் கருத்துக் கணிப்புகள்மேலும் படிக்க...
தமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் பதிவு
தமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படி பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி சங்கரபேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த திருநங்கை ஸ்ரீஜா. இவரும் அருண்குமார் என்ற வாலிபரும் 31.10.2018 அன்று இந்து முறைப்படி திருமணம்மேலும் படிக்க...
தேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்
ஊழலுக்கு எதிரான கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கை பெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக இன்று பதவியேற்றார். கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நாடு உக்ரைன். இந்நாட்டின் அதிபரான பெட்ரோ பொரஷென்கோவின் (வயது 53),மேலும் படிக்க...
சஹ்ரான் தொடர்பிலான டி.என்.ஏ. அறிக்கை நாளை நீதிமன்றில் ?
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக கருதப்படுபவரும் ஷங்ரில்லா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த தற்கொலைதாரிகளில் ஒருவரான தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் தொடர்பிலான டி.என்.ஏ. பகுப்பய்வு அறிக்கை நாளை நீதிமன்றுக்கு வழங்கப்படமேலும் படிக்க...
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை
பாடசாலைகளின் பாதுகாப்பு உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் விடயத்தில் எதுவித அச்சத்தையும் பெற்றோர் கொள்ளத்தேவையில்லை என்று கல்வி அமைச்சர் அகிரவிராஜ் காரியவசம் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், படைத் தரப்பின் மீது நம்பிக்கைமேலும் படிக்க...
கடற்தொழிலுக்குச் சென்ற முன்னாள் போராளி வலிப்பால் மரணம்
யாழ் வடமராட்சி கிழக்கை சேர்ந்த, முன்னாள் போராளி ஒருவர் கடற்தொழிலுக்குச் சென்ற வேளையில் வலிப்பு ஏற்பட்டு, கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் அமைப்பில் இருந்த அம்பிக்கோ என்றழைக்கப்படும் கமலதாஸ் அமலதாஸ் (அப்பையா) என்ற 34 வயதானமேலும் படிக்க...
சரிந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் – மத்திய வங்கி ஆளுனர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் காரணமாக பின்னடைவு ஏற்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தினை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசாமி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மீண்டும் சமாதானத்திற்கு பங்கம் ஏற்படாத வகையிலான நிலையை ஏற்படுத்துவதன் மூலம்மேலும் படிக்க...
18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன் (20/05/2019)
தாயகத்தில் புங்கையூரை சேர்ந்த கணேச ராஜ குருக்கள் சிவசுதக் குருக்கள் அராலி சசிகலா சிவசுதகுருக்கள் தம்பதிகளின் செல்வப்புதல்வன் சிபிவிஸ்டன் 18ம் திகதி மேமாதம் சனிக்கிழமை அன்று வந்த தனது 18வது பிறந்தநாளை 20ம் திகதி திங்கட்கிழமை இன்று பிரான்ஸ் Le Bourgetமேலும் படிக்க...
கருத்து கணிப்புகள் பா.ஜனதாவின் ஏற்பாடு- கே.எஸ்.அழகிரி
கருத்து கணிப்புகள் பா.ஜனதாவின் ஏற்பாடு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் கூடிய ஒரு மாற்றம் வர இருக்கிறது.மேலும் படிக்க...
தஜிகிஸ்தான் சிறையில் பயங்கரம் ; பலியானவர்களில் பலர் ஐ.எஸ் கைதிகள்
தஜிகிஸ்தானிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பலர் ஐ.எஸ். சிறைக் கைதிகள் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருகையில், தஜிகிஸ்தானில் வாக்தத் நகரில் உள்ள சிறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதிகளுக்குமேலும் படிக்க...
ரிஷாத் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் த.தே.கூ. நடுநிலைமை வகிக்க வேண்டும் – சிவாஜிலிங்கம்
அமைச்சர் றிசாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளரும் முன்னாள் பாராளுமன்றம் மற்றும் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.மேலும் படிக்க...
முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை
யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்றுப் பதிவு செய்யப்பட்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட 144 பேரில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் 40 பேருக்கு முதற்கட்டமாக வாழ்வாதார உதவி திட்டங்களை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமாநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ளமேலும் படிக்க...
ஒஸ்திரியாவில், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்துமாறு பரிந்துரை
ஒஸ்திரியாவில், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்துமாறு அந்த நாட்டு ஜனாதிபதியிடம் பிரதமர் செபஸ்டியன் குர்ஸ் (Sebastian Kurz) பரிந்துரை செய்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் அந்த நாட்டு துணைப்பிரதமர் பதவி விலகினார். இந்தநிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள்மேலும் படிக்க...
ரிசாட் பதியுதீன் பதவி விலக வேண்டும் – இல்லாவிட்டால் அவருக்கு எதிராக வாக்களிப்பேன்….!
அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்பதாக அமைச்சு பதவியினை இராஜினாமா செய்யாவிட்டால் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்தார். அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ்மேலும் படிக்க...
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணிய நாடாளுமன்ற மொழி பெயர்ப்பாளர் தடுத்து வைப்பு
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர் மூன்று மாத காலம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவசர கால சட்டத்தின் கீழ் ஜமால்தீன் நவ்சாத் என்ற சந்தேக நபரே தடுத்துமேலும் படிக்க...
பிரேசிலில் உணவகமொன்றில் துப்பாக்கிச் சூடு.. பலர் பலி
பிரேசில் – வடக்கு பாரா மாநிலத்தில் உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கொண்ட குழு, உணவகத்திற்குள் நுழைந்து இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கிச்மேலும் படிக்க...