Main Menu

மகனுக்காக செலவிட்ட முழுப் பணத் தொகையையும் மீளச் செலுத்துமாறு கணவன் தனது மனைவிக்கு எதிராக வழக்கு!

கடந்த எட்டு வருடங்களாக மகனுக்காக செலவிட்ட முழுப் பணத் தொகையையும் மீளச் செலுத்துமாறு கணவன் ஒருவரினால் தனது மனைவிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது

லண்டன் உயர் நீதிமன்றத்தில் குடும்ப விவகார பிரிவில் இந்த விநோதமான வழக்கு நேற்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு தொடுநரினால் தன்னுடைய மகன் என்ற நம்பிக்கையில் கடந்த 8 வருடங்களாக பராமரிக்கப்பட்ட சிறுவன், தன்னுடைய மனைவிக்கும் பிறிதொரு ஆணுக்கும் இடையிலான உறவின் காரணமாக பிறந்தவர் என்ற உண்மை தெரியவந்ததை அடுத்தே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த உண்மை தெரியவந்தமையினால் தனக்கு ஏற்பட்ட மனவுளைச்சலுக்கும், செலவீனங்களுக்கும் இழப்பீட்டைக் கோரி பாதிக்கப்பட்ட நபர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அதேவேளை, குழந்தையின் உண்மையான தந்தையின் பெயரை வௌிப்படுத்துமாறும் அந்த பெண்ணை வலியுறுத்தியுள்ளார். எனினும், அதற்கு அவரது மனைவி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வழக்கு விசாரணைகளின்போது ஆதாரங்களை பகுப்பாய்வு செய்த நீதிபதி வெளியிட்ட கருத்துக்களின் மூலம் வழக்கு தொடர்பான விபரம் நேற்று வெளியிடப்பட்டது

வழக்கு விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அடுத்து வருகின்ற விசாரணைகளின்போது தீர்ப்பை வெளியிட முடியும் என்று நம்பிக்கை வெளியிட்ட நீதிபதி, சிறுவனின் எதிர்கால நலன்கருதி சிறுவன் தொடர்பான விபரங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளார்.

பகிரவும்...