Main Menu

சட்டவிரோத குடியேற்றவாசிகள் வெளியேற்றப்படுவர் – ட்ரம்ப் எச்சரிக்கை!

சட்டவிரோதமாக குடியேறியுள்ள அனைவரும் விரைவில் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். இந்தப் பிரச்சினையை அவர் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், ‘அவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள். பல்லாண்டு காலமாக சட்ட விரோதமாக குடியேறிய மக்களைத்தான் நாங்கள் அகற்றுகிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...