Main Menu

தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிப்பு

லண்டனில் தாக்குதலை நடாத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

28 வயதுடைய உஸ்மான் கான் என்ற நபரே லண்டனில் தாக்குதலை மேற்கொண்ட நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உஸ்மான் கான் பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடந்த 2012ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தண்டனைக்குட்படுத்தப்பட்ட ஒருவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

லண்டனில் நேற்று இடம்பெற்ற இந்த சம்பவமானது பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கை எனவும் மெட்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டன் பாலம் தாக்குதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...