Main Menu

புதிய தலைவரை தேர்வு செய்ய ஆகஸ்ட் முதல் வாரத்தில் காங். தேசிய செயற்குழு கூட்டம்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தபின் காங்கிரஸ் செயற்குழு அடுத்த வாரம் கூடி கட்சியின் புதிய தலைவரை முடிவு செய்யக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை ெதாடர்ந்து, கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்தி முடிவு செய்தார்.

ஆனால், ராகுல்காந்தி தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் வேண்டுகோளை, இதுவரை ராகுல் காந்தி ஏற்கவில்லை.

காங்கிரஸ் தலைவராக தொடர ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார். ராகுலின் முடிவை காங்கிரசின் மூத்த தலைவர்கள் பலரும் ஏற்காத நிலையிலும் ராகுல் தனது முடிவில் விடாப்பிடியாக உள்ளார். 

இதற்கிடையில், அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் இதுதொடர்பாக எந்த முடிவும் எடுப்பதைத் தவிர்த்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடர் முடிந்ததும் இந்த விவகாரம் குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கூறுகையில், ‘ஆகஸ்ட் முதல் வாரத்தில் காங்கிரஸ் செயற்கு கூட்டம் நடைபெறவிருந்தது.

ஆனால், பட்ஜெட் அமர்வு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், அது பட்ஜெட் அமர்வு பின்னர் நடைபெறும். வரவிருக்கும் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்வார்.

ஆனால், அவர் கட்சித்தலைவரை தேர்ந்தெடுப்பதில் பங்கேற்க மாட்டார்.

மேலும், கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி கூட பங்கேற்க மாட்டார்’ என்றனர். 

பகிரவும்...