Main Menu

பிரித்தானியாவில் உள்ள மதுபான விடுதிகள் மூடப்பட்டன

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான பலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பிரித்தானியாவில் உள்ள மூன்று மதுபான விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

முடக்க நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டதால் மூன்று மாதங்களுக்குப் பின்னர் வாடிக்கையாளர்களை வரவேற்க நூற்றுக்கணக்கான மதுபான விடுதிகள் திறக்கப்பட்டன.

இருப்பினும் சில இடங்களில் சமூக விலகல் போன்ற சுகாதார கட்டுப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டமையினால் மீண்டும் வைரஸ் தொற்று பரவல் ஏற்படக்கூடிய அச்சம் ஏற்பட்டது.

மேலும் வார இறுதியில் மேற்கு யார்க்ஷயர், ஹாம்ப்ஷயரின் ஆல்வர்ஸ்டோக், சமர்செட் பகுதிகளில் உள்ள விடுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான பலர் அடையாளம் காணப்பட்டனர்.

இதனை அடுத்து குறித்த மூன்று மதுபான விடுதிகள் அனைத்தும் தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...