Main Menu

மீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது!

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நீண்ட நாட்களின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜேசன் ஹொல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று இங்கிலாந்தின் சௌதம்டனில் ஆரம்பமாகியுள்ளதுடன் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது.

கொரோனா பரவலால் தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த தொடரின் மூலம் 117 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில் இந்தத் தொடர் உலகம் முழுவதும் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும்...