Main Menu

பிரித்தானியாவின் மிக மோசமான பாலியல் குற்றவாளி ஜோசெஃப் மக்கான்

இங்கிலாந்து முழுவதும் 11 பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பலாத்காரங்களை மேற்கொண்ட நபர் ஒருவர் 37 குற்றங்களைச் செய்துள்ளார் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜோசெஃப் மக்கான் என்னும் இந்தக் குற்றவாளியினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 முதல் 71 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர்களில் மூன்று பெண்கள் வீதியில் இருந்து கத்திமுனையில் கடத்திச்செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

34 வயதான பெண்ணொருவர் வீட்டில் இருந்தவேளை அவரைக் கட்டிலில் கட்டிவைத்து பாலியல் பலாத்தகாரம் செய்ததுடன் அவரது மகனையும் மகளையும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

லண்டன், ஹரோவைச் (Harrow) சேர்ந்த ஜோசெஃப் மக்கான், பாலியல் வல்லுறவு மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களைச் செய்துள்ளார் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

திருட்டு மற்றும் கொக்கெய்ன் குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்ட ஜோசெஃப் மக்கான் கடந்த பெப்ரவரி மாதம் நன்னடத்தைச் சோதனைக் கண்காணிப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக விடுதலையாகியிருந்தார்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ச்சியாக லண்டன், கிரேற்றர் மன்செஸ்ரர் மற்றும் செஷயர், வற்ஃபேர்டில் பாலியல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் தேடுதல் மேற்கொண்டு குறித்த குற்றவாளியைக் கைது செய்தனர்.

துப்பறியும் இன்ஸ்பெக்ரர் கத்ரின் குட்வின் தெரிவிக்கையில்; இதுவரை இந்த நாடு கண்டிராத மிக ஆபத்தான பாலியல் குற்றவாளிகளில் மக்கானும் ஒருவர் என்று கூறினார்.

ஜோசெஃப் மக்கானின் பாலியல் குற்றங்கள்

ஏப்ரல் 21 ஆம் திகதி வற்ஃபேர்டில் உள்ள நைற் கிளப்பில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்ற 21 வயதான பெண்ணை கத்திமுனையில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

மறுநாள் விடுவிக்கப்பட்ட அந்த இளம் பெண் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் என்று வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 25 ஆம் திகதி நள்ளிரவு வேளை கிழக்கு லண்டனின் வோல்தம்ஸ்ரோவில் வீட்டிற்கு நடந்து சென்ற 25 வயதுப் பெண் கடத்தப்பட்டு 14 மணி நேரத்திற்கும் மேலாக பல இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

வடக்கு லண்டனின் எட்ஜ்வெயாரில் 21 வயதுப் பெண் ஒருவர் தனது சகோதரியுடன் வீதியில் நடந்து சென்றபோது அவர்களைக் காரில் கடத்திச் சென்ற மக்கான் இருவரையும் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் பின்னர் சகோதரிகள் இருவரையும் வற்ஃபேர்டில் உள்ள ஒரு ஹோட்டல் அறையைக்கு கொண்டு சென்றபோது அவர்கள் வொட்க்கா போத்தலினாலில் மக்கானின் தலையில் அடித்துவிட்டுத் தப்பியோடினர்.

மே 5 ஆம் திகதி, கிரேற்றர் மன்செஸ்ரரில் உள்ள மதுவிடுதியில் சந்தித்த 34 வயதான பெண்ணிடம் நட்பாகப் பழகி அவரது வீட்டிற்குச் சென்று அவரை மகன், மகள் முன்னிலையில் கட்டிலில் கட்டிவைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் அவரது 11 வயது மகனையும் 17 வயது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

குறித்த 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தபோது அங்கிருந்து ஆடைகள் எதுவுமற்ற நிலையில் வீட்டின் ஜன்னலால் குதித்துத் தப்பித்துள்ளார்.

அதேநாளில் ராம்ஸ்பொட்டமிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பிய 71 வயது பெண் மக்கானால் கடத்தப்பட்டார்.

13 வயதுச் சிறுமி, ஹேவூட் நகரின் வீதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டார்.

இரண்டு 14 வயது சிறுமிகள், செஷயரில் உள்ள கொங்லெற்றனில் உள்ள வீதியில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டபோது பொலிஸார் விரட்டிச் சென்று சிறுமிகளை மீட்டு குற்றவாளியைக் கைது செய்தனர்.

மக்கானுக்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தின் பேரில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜோசெஃப் மக்கான் என்னும் கொடூரமான பாலியல் குற்றவாளியின் வழக்குகள் லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நடைபெற்று குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குற்றவாளிக்கான தீர்ப்பு எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது.

நன்றி bbc.co.uk

பகிரவும்...