Main Menu

பிரான்ஸில் இடம்பெற்ற போராட்டத்தில் மூன்று ஊடகவியலாளர்கள் காயம்!

பிரான்ஸில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தில் மூன்று ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய இந்த போராட்டத்தில் துருக்கியைச் சேர்ந்த செய்தி நிருபர் ஒருவரும், இரண்டு பிரான்ஸ் ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர்களுக்கு முழங்காலில் காயமேற்பட்டதோடு, தலையிலும் தாக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களுக்கு உயிராபத்தான காயங்கள் எதுவும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டில் அரசின் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து, நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், நாடே ஸ்தம்பித்து போனது.

காலை முதல் வன்முறைகள் ஏதுமற்று போராட்டம் கடந்திருந்தாலும், மாலையில் பரிசில் பெரும் வன்முறை இடம்பெற்றது. இதன்போதே ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.

பகிரவும்...