Main Menu

பிரித்தானியாவின் தேசத் துரோக சட்டங்களை மாற்றியமைக்க பிரதமர் தீர்மானம்

பிரித்தானியாவின் தேசத்துரோக சட்டங்களை மாற்றியமைக்க பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய தேசத்துரோகச் சட்டம், வெளிநாட்டு முகவர்களைக் கண்காணிப்பதற்கான புதிய உளவு சட்டம் மற்றும் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் ஆகியவற்றினை டிஜிட்டல் சகாப்தத்திற்கு ஏற்றதாக மாற்ற பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளதாக டவுனிங் தெரு ஆதாரங்களை மேற்கோள் காட்டி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

1695 ஆம் ஆண்டுக்கு பின்னர் தேசத்துரோகச் சட்டங்களின் மிகப்பெரிய மறுசீரமைப்பு என்றும் ரஷ்யா மற்றும் சீனா முன்வைக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...