Main Menu

ஆயுத விற்பனை நிலையத்தில் கொள்ளை

ஆயுதம் விற்பனை செய்யப்படும் நிறுவனம் ஒன்றில் இருந்து 150 வரையான ஆயுதங்கள் திருடப்பட்டுள்ளன.  Gleizé, (Rhône) நகரில் (Villefranche-sur-Saône நகருக்கு அருகே) இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

கொள்ளையர்கள் சிலர் இணைந்து குறித்த நிறுவனத்தின் கூரையை கிரைண்டர் கருவியை பயன்படுத்தி துளையிட்டுள்ளனர். பின்னர் அதன் வழியாக உள்ளே இறங்கி ஆயுதங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். 150 வரையான ஆயுதங்கள் திருடப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை.  கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலும் இதேபோன்ற கொள்ளைச் சம்பவம் இங்கு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...