Main Menu

பிரான்ஸின் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கினால் ஒன்பது பேர் உயிரிழப்பு!

பிரான்ஸின் தென் கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதுடன், பலர் காணாமலும் போயிருந்த நிலையில், தற்போது அவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.

இந்தநிலையில் இதுவரை மொத்தமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதில் இருவரின் சடலங்களே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஒக்டோபர் மாத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த இந்த வெள்ளத்தினால் ஆல்ப்ஸ்-மரைடிம்ஸ் மாவட்டம் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...