Day: November 14, 2020
பெல்ஜியத்தில் கொவிட்-19 தொற்றினால் 14ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 14ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் 14ஆயிரத்து 106பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 18ஆவது நாடாக விளங்கும் பெல்ஜியத்தில் மொத்தமாக ஐந்துமேலும் படிக்க...
வயோதிபர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம்!
நாட்டில் உள்ள வயோதிபர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவறுத்தியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்ட நாள் நோயாளர்கள் போன்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமாயின் அபாய நிலை ஏற்படுவதற்கானமேலும் படிக்க...
அனைவருக்கும் உள அமைதி கிடைக்கும் நாளாக தீபாவளி திருநாள் அமையட்டும்- ஜனாதிபதி
தீபாவளி திருநாள் அனைவருக்கும் உள அமைதி கிடைக்கும் நாளாக அமையட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
‘பா.ஜ.க.வை இல்லாமல் செய்வோம்’ – நாவாப் மலீக்
நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வை இல்லாமல் செய்து விடுவோம் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மலிக் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ‘மகாராஷ்டிர விகாஸ் அகாடி’ என்ற பெயரில் கூட்டணிமேலும் படிக்க...
பிரதமரின் தீபாவளி வாழ்த்து செய்தி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகல இந்து அடியார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இருளை அகற்றி ஒளி ஏற்றும் இந்து மக்களின் உயர்ந்த சமயப் பண்டிகைத் தினமான தீபாவளிப் பண்டிகையைமேலும் படிக்க...
இராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி
இராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்போது, தனக்கு மன நிறைவு ஏற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அந்நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது,மேலும் படிக்க...
பிரான்ஸின் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கினால் ஒன்பது பேர் உயிரிழப்பு!
பிரான்ஸின் தென் கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதுடன், பலர் காணாமலும் போயிருந்த நிலையில், தற்போது அவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன. இந்தநிலையில் இதுவரை மொத்தமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகமேலும் படிக்க...
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் தீபத்திருநாளை கொண்டாடுவோம்- செல்வம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை தீபாவளி திருநாளை மிகவும் அமைதியான முறையில் வீடுகளில் இருந்தே அனைவரும் கொண்டாடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில்மேலும் படிக்க...