Main Menu

பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தைப்பொங்கல் வாழ்த்து

பிரித்தானியாவில் வாழும் அருமையான தமிழ்ச் சமூகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கூடி தைப்பொங்கலைக் கொண்டாடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் அனைவரும் பாரம்பரியமாக இந்த வழிபாட்டு நாளைக் கொண்டாடுவது போன்று நானும் பிரித்தானியாவிலுள்ள தமிழர்களின் பங்களிப்பைக் கொண்டாட விரும்புகிறேன்.

எங்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் வணிகங்களை உருவாக்குவதிலிருந்து எங்கள் பாடசாலைகளில் பிள்ளைகளுக்குக் கற்பித்தல், நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்தல், நம் சமூகத்தில் பாதிக்கப்படக்கூடியவர்களைக் கவனித்தல் என மேலும் பல, உங்களது அருமையான பங்களிப்புக்களாகும்.

இந்த நாட்டை பூமியில் வாழக்கூடிய மிகச்சிறந்த இடமாக மாற்றுவதே எங்களது திட்டமாகும்.

எனவே எங்கள் அருமையான தமிழ்ச் சமூகத்திற்கு மகத்தான நன்றி கூறுகிறேன்.

இன்றும், வரவிருக்கும் நாட்களிலும் பண்டிகைகளின் ஒவ்வொரு இன்பத்தையும் விரும்புகிறேன்.

இனிப்பு பொங்கல் நிறைந்துள்ள பாரம்பரிய பானை போன்று நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் செழிப்புனும் வாழ எனது வாழ்த்துக்கள்.

பகிரவும்...