Main Menu

பா.சிதம்பரம் மருத்துவ மனையில் அனுமதி!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.சிதம்பரம், உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், பா.சிதம்பரம் உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை எனவும், தேவைப்பட்டால் உயர் மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் எனவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பா.சிதம்பரம் சி.பி.ஐ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து முன்பிணை கோரி பா.சிதம்பரத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் எதிர்வரும் 15 திகதி அவரின் பிணை மனு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் பா.சிதம்பரம் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...