Main Menu

பாரதிய ஜனதா கட்சி அடிமை போல் பணிந்து போவதை ஏற்க முடியவில்லை – சுப்ரமணியன் சுவாமி

அகில இந்திய கட்சியான பாரதிய ஜனதா கட்சி அடிமை போல் பணிந்து கூட்டணி கட்சியிடம் சீட்டுக்காக மன்றாடுவதை ஏற்க முடியவில்லை என பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

திருப்பதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வருடம் தமிழக தேர்தல் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“நான் இம்முறை தமிழக தேர்தலில் அதிக முனைப்பு காட்டவில்லை. அதனால் தமிழ்நாட்டு பக்கம் செல்லவில்லை. கூட்டணிகள் குறித்தும் கவலை கொள்ளவில்லை.

பாஜக தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தன்னந்தனியாக யாருடைய கூட்டணியும் இல்லாமல் போட்டியிடும் போது பல இடங்களில் டிபாசிட் இழந்தாலும் 2 அல்லது 3 தேர்தல்களை எதிர்கொண்டால் மேற்கு வங்கத்தில் பாஜ கட்சிக்கு என தனி அங்கீகாரம் கிடைத்தது போன்று தமிழகத்திலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் கூட்டணி என்று கூறிக் கொண்டு 20, 30 தொகுதிகளைப் பேசிக் கொண்டு அகில இந்திய கட்சியான பாஜக அடிமை போல் அடுத்தவரிடம் சீட்டுக்காக கையேந்தி நிற்பது ஏற்க முடியவில்லை.

அவ்வாறு கூட்டணி வைத்தாலும் பாஜ கட்சிக்கு கிடைப்பது 2 அல்லது 3 மட்டுமே. கடந்தாண்டு அது கூட கிடைக்கவில்லை. அதனால் இந்தாண்டு தமிழக தேர்தலில் இருந்து நான் ஒதுங்கி விட்டேன். எனவே, அது குறித்த கருத்து கூற விரும்பவில்லை” என்றார்.

பகிரவும்...