பாகிஸ்தானுடனான எல்லையை மூடியது இந்தியா!
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் எல்லை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் மூடப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மும்முரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் எல்லை இன்று முதல் மூடப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு செல்லும் சாலை வழிகள் நேற்று மூடப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எல்லை பகுதியில் அமைந்துள்ள அசாம், பீகார், மேகாலயா, மிசோரம், திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட்இ மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு இது தொடர்பான உத்தரவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.