Main Menu

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க கோரி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க கோரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் குறித்த கையெழுத்த சேகரிக்கும் போராட்டம் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

குறிதத் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டினர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரி நாடாளாவிய ரீதியில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...