Main Menu

பனாமா கால்வாய் வறண்டு போகும் நிலை

உலகத்தின் மிக முக்கியமான செயற்கை கடல் நீரிணைப்புகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்தக் கால்வாய் வறண்டு போகும் நிலை உருவாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது.

சூயஸ் கால்வாய் போலன்றி, அமெரிக்க கண்டத்தின் பனாமா கால்வாய் காதுன் எனும் நன்னீர் ஏரியின் மூலம் நிரப்பப்பட்டு செயல்பட்டு வரும் கால்வாய் ஆகும். இந்நிலையில் சமீப காலமாக அந்த ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணரான நெல்சன் குவேரா, காதுன் ஏரியின் நீர் மட்டம் 5 அடி குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஏரியை உருவாக்கும்போது அங்கிருந்த காடுகளின் மரங்கள் பாதியளவு மட்டுமே வெட்டப்பட்டன. ஒவ்வொரு முறை இந்த மாதம் வரும்போதும் அவற்றில் சில தண்ணீருக்கு வெளியே எட்டிப் பார்ப்பதுண்டு.

ஆனால், இன்னும் முழுமையாக கோடைக் காலம்கூட தொடங்காத நிலையில் இப்போதே ஒரு காடளவிற்கான மரங்கள் நீர் மட்டத்துக்கு மேலே நீட்டிக் கொண்டிருப்பதாகவும் பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணர் நெல்சன் குவேரா தனது பயணத்தின்போது கண்டறிந்துள்ளார்.

பகிரவும்...