Main Menu

நியூசிலாந்து சுகாதார அமைப்பு மீது இணைய தாக்குதல் – தகவல்கள் ஊடகங்களுக்கு கசிவு

வைகாடோ மாவட்ட சுகாதார அமைப்பு மீது சட்டவிரோதமாக ஊடுருவி தனியாரின் தகவல்கள், ஆவணங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை இரவு ஆவணங்கள், பதிவுகள் மற்றும் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளுடன் மின்னஞ்சல்கள் வந்ததாக ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச ஹக்கர்கள் குழுவால் அயர்லாந்தின் சுகாதார அமைப்பு தாக்கப்பட்ட சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அயர்லாந்தில் இணையத்தை ஊடுருவிய அதே குழுவா வைகாடோவின் அமைப்புகளைத் தாக்கியது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

பகிரவும்...