Main Menu

நாட்டிற்காகவே பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றேன் – கமல் ஹாசன்

நாட்டிற்காகவே காங்கிரசின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொண்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப் பயணம் டெல்லியை நேற்று சனிக்கிழமை வந்தடைந்தது.

இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இணைந்து கமல் ஹாசன் சுமார் 3 கிலோமீட்டர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரகாசமான எதிா்காலத்திற்கு தகுதியான பாரம்பரியத்தின் பெருமையை இணைக்க முயற்சி செய்வதாக கமல் ஹாசன் இதன்போது தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனத்திற்கு நெருக்கடி வந்தால் ,எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் போராடுவேன் என்றும் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...