Main Menu

நாடு திங்கட்கிழமை முழுமையாக திறக்கப் படலாம்- அஜித் ரோஹன

புதிய வழமைப்படுத்தல் திட்டத்தின்கீழ், எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாடு முழுமையாகத் திறக்கப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், நாடு திறக்கப்படும் சந்தர்ப்பத்தில், உலகில் தற்போது நடைமுறையில் உள்ள எண்ணக்கருவின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வழமைப்படுத்தல் என்ற அடிப்படையிலான அந்த எண்ணக்கருவுக்கு, உலக சுகாதார ஸ்தாபனத்தினால்கூட, சில ஒழுங்கு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, கொரோனா வைரஸ் பரவல் இருக்கின்ற நிலையில், அதனுடன் வாழப் பழகுவது தொடர்பான எண்ணக்கருவே அதுவாகும் என அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, மேலும் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு இந்த நோய்த் தாக்கம் இருக்கும்.

எனவே, வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில், அதனைக் கட்டுப்படுத்தி வாழவேண்டிய நிலை உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு, மக்களின் ஒத்துழைப்பு நூற்றுக்கு 100 வீதம் அவசியமாகும் என அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பகிரவும்...