Main Menu

நடிகர் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து

சிறப்பு விருது பெற உள்ள நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி காந்த், சினிமாதுறையில் சிறப்பாக சேவையாற்றியதற்காக மத்திய அரசு அவருக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்கிற பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது.
கோவாவில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந் தேதி வரையில் நடைபெறும் சர்வதேச திரைப் பட விழாவில் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 10 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் ரஜினிக்கு வழங்கப்படும் இந்த சிறப்பு விருது மிகப் பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது. தனக்கு வழங்கப்பட உள்ள இந்த விருது பற்றி ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறப்பு விருது பெற உள்ள நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பகிரவும்...