Main Menu

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – கோப்பையை வென்றார் ஜோகோவிச்

பிரான்சில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் டெனிஸ் ஷபோவலோவை வென்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) வீழ்த்தி 5-வது முறையாக இங்கு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு ரூ.7¾ கோடி பரிசுத்தொகையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது.

ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் தொடரை ஜோகோவிச் வெல்வது இது 34-வது முறையாகும். இந்த வகையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் முன்னணியில் (35 பட்டம்) இருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் ஆண்டின் இறுதியில் நம்பர் ஒன் இடத்தை தக்கவைப்பதை ஜோகோவிச் நெருங்கியுள்ளார்.

பகிரவும்...