Main Menu

தொற்று காலத்தில் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசியே சிறந்த வழி: பிரதமர் ஜோன்ஸன்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதே சிறந்த வழி என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் முதல் அளவை நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் பெற்றுக்கொண்டதன் பின்னர், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கருத்தினை பதிவிட்டிருந்தார்.

அத்துடன், ‘அனைத்து விஞ்ஞானிகளுக்கும், மருத்துவ நிபுணர்களுக்கும் நன்றி. அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோம்’ எனவும் பதிவிட்டுள்ளார்.

தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்கும் ஒரு பகுதியாக பிரதமர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...