Day: March 20, 2021
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள்!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துவதற்கு உதவுமாறு தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தின் முழு விபரம் வருமாறு, ஐ.நா. மனிதமேலும் படிக்க...
9வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சாம்பவி ஜீவன் (20/03/2021)
பிரான்சில் வசிக்கும் ஜீவன் கலைச்செல்வி தம்பதிகளின் செல்வப் புதல்வி சாம்பவி இன்று தனது 9வது பிறந்த நாளை அன்பு தம்பி எழிலன் அன்பு தங்கை கவிநயாவுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் . இன்று 9வது பிறந்த நாளை கொண்டாடும் சாம்பவியைமேலும் படிக்க...
தொற்று காலத்தில் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசியே சிறந்த வழி: பிரதமர் ஜோன்ஸன்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதே சிறந்த வழி என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் முதல் அளவை நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் பெற்றுக்கொண்டதன் பின்னர்,மேலும் படிக்க...
ஜெயலலிதாவின் மரணம் குறித்து நேர்மையான விசாரணை நடத்துவோம்- மு.க.ஸ்டாலின்
பாரதிய ஜனதாவின் கிளைக்கழகமாக அ.தி.மு.க. செயல்படுகிறது என தக்கலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். தஞ்சைமேலும் படிக்க...
ஒரு மாதத்திற்குள் தீர்வு – உறவுகளிடம் உறுதியளித்தார் டக்ளஸ்
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வினை பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். காணாமற்போனோரின் உறவினர்களுடன் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் பேசிய அவர், உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்தில்மேலும் படிக்க...
தமிழர் விவகாரம் குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு இன்று!
‘தமிழர் தாயகத்தை இழத்தல், தமிழர் நிலத்தை பாதுகாப்பதற்கான உபாயங்களை வகுத்தலும் பிரச்சினைகளை இனம்காணுதலும்’ என்னும் தலைப்பில் சர்வதேச மாநாடு, இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த சர்வதேச மாநாடு, பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 12.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை (இலங்கை நேரம்மேலும் படிக்க...
“கவிதை எனும் மந்திரம்” (சர்வதேச கவிதை தினத்திற்கான சிறப்புக்கவி)
கவிதை என்ற மந்திரம் கவர்ந்து இழுத்த தந்திரம் எனைக் கட்டிப் போட்டஇயந்திரம் உள்ளத்தின் உணர்வாகி உணர்வுகளின் தெறிப்பாகி உவமையின் வனப்பாகி காலத்தின் தேவையாகி கவிதையாய் பொங்கிடுமே ! இலக்கியத்தின் அழகியல் வடிவம் இரசனையின் இலயிப்பு கலை இன்பத்தின் குதூகலம் கலையின் அரசிமேலும் படிக்க...