Main Menu

துயர் பகிர்வோம் – திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள்

தாயகத்தில் முல்லைத்தீவு அளம்பிலை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள் 5ம் திகதி செப்ரெம்பர் மாதம் வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலம் சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், விநாயக மூர்த்தி சின்னாச்சியின் பாசமிகு மருமகளும், யோகேஸ்வரன் (பிரான்ஸ்), கீதாஞ்சலி (இலங்கை), காலம் சென்ற ஜெகதீஸ்வரன், விகிதாஞ்சலி (இலங்கை), சுயாதாஞ்சலி (அவுஸ்திரேலியா) , சதீஸ்வரன் (அவுஸ்திரேலியா), கவிதாஞ்சலி (இலங்கை) ஆகியோரின் அன்புத்தாயாரும்

சொபித்தா (TRT தமிழ் ஒலி வானொலி அறிவிப்பாளர்) பிரான்ஸ் , வைரமூர்த்தி , மேரி பெனிற்றா , கிளைமன், இருதயராஜ் (இலங்கை) , சசிரேகா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சரண்யா, சயந்தன், மரிசுடரினா, சிந்துஜா, கவிப்பிரியா, சோபனா, கிளின்டன், ஐஸ்வினி, திஸான், சிந்துஜன், கிருஷிகா, டனுசியன், தர்சிகா, மதுஷாலினி, ஜெரோமியா, கஸ்கிருத்தீஸ், கஸ்மிக்கா, பிரித்திகன் ஆகியோரின் பேத்தியும், ஜஸ்ரின் ராகவி, லிரிக்ஸா, தீபிகா ,கியோலி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்கு திருப்பலி பூசை 06ம் திகதி வெள்ளிக்கிழமை (06.09.2019) 10.30 மணிக்கு இடம்பெற்று 12.00 மணியளவில் முல்லைத்தீவு அளம்பில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
மருமகள்
திருமதி. சொபித்தா யோகேஸ்வரன்
பிரான்ஸ்
கைபேசி இல : 0033 (0)7 67 21 81 96

அன்னாரின் பிரிவுத்துயரில் தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு, ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து, ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்தித்து கொள்கிறோம்.

பகிரவும்...