Main Menu

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் – வைகோ அறிவிப்பு

சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த சந்திப்பின்போது தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை என்றும் வைகோ தெரிவித்தார்.

அத்தோடு எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க. 200 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

பகிரவும்...