Main Menu

திரையரங்குகளில் 100 வீத பார்வையாளர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

திரையரங்குகளில் நாளை முதல் 100 வீத பார்வையாளர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்குவதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 100 வீத இருக்கைகளையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், திரையரங்குகளில் முகக் கவசம் அணிவது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது கட்டாயம் எனவும், இணையம் ஊடான முன்பதிவுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஓ.ரி.ரி. தளத்தில் வெளியாகும் சில தொடர்கள், படங்கள் மீது அரசுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கின்றன என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஓ.ரி.ரி. படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

பகிரவும்...