Main Menu

திருமண வாழ்த்து – ஜெயகர்ணா & துயிலகா (20/08/2021)

பிரான்சில் வசிக்கும் திரு திருமதி கனகலிங்கம் தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெயகர்ணா அவர்களும் நெதர்லாந்தில் வசிக்கும் திரு திருமதி றொபின்சன் தம்பதிகளின் செல்வப்புதல்வி துயிலகா அவர்களும் 20/08/2021 ஆகஸ்ட் மாதம் வெள்ளிக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஜெயகர்ணா துயிலகா தம்பதிகளை அன்பு அப்பா, அம்மா, அன்பு மாமா, மாமி லண்டனில் வசிக்கும் அக்கா சுபித்திரா சபேசன் குடும்பம், அத்தை இதயச்சந்திரன் அன்னலட்சுமி குடும்பம், சுவிஸ் இல் வசிக்கும் அண்ணா சிவசங்கர் துவேரகா குடும்பம் ,மாமா கிருஷ்ணராஜா விஜயா குடும்பம், மாமா பத்மநாதன் செல்வி குடும்பம், மச்சாள் சுதர்சினி செல்வன் குடும்பம் ,பெரியம்மா கனகரத்தினம் தனலட்சுமி குடும்பம், அத்தை கனகரத்தினம் பாக்கியலட்சுமி குடும்பம், மருமக்கள் சாஜீதன் சாருஜன் சுவானிகா அஸ்திகா விராட்த் மற்றும் பிரான்ஸ் இல் வசிக்கும் மாமா கணேசராஜா யோகராணி குடும்பம், அத்தை சறோஜினி சந்திரகோபால் குடும்பம், தாயகத்தில் வசிக்கும் அத்தை அன்புமலர் சதானந்தம் குடும்பம், மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் இன்று போல் என்றும் எல்லா செல்வங்களும் பெற்று ஆண்டவன் கிருபையுடன் பல்லாண்டு காலம் பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஜெயகர்ணா துயிலகா தம்பதிகளை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அனைத்து அன்புறவுகளும் அன்பு நேயர்களும் இணைபிரியா தம்பதிகளாக பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்.

இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றனர் பெல்ஜியத்திலிருந்து திரு திருமதி வில்வராஜா சிவராணி தம்பதிகள்

அவர்களுக்கும் எமது நன்றிகள்

திருமண வாழ்த்து

மங்களமே சிறக்க
மணவாழ்க்கை இனிக்க
தம்பதிகள் ஒன்றாய்ச் சேர்ந்திருக்க
வாழ்த்துக்கள் பலர் உரைக்க
இனியதோர் நாளாய் இந்நாள் இருக்க
பெற்றோரும் உற்றோரும் வாழ்த்துகள்
உரைக்க
இசைகள் முழங்கி நிற்க
இனியதோர் பாடல் ஒலிக்க
அன்பு என்ற சொல் எடுத்து
அகிலத்தில் தம்பதிகள் காலடி பதிக்க
வாழுகின்ற காலமெல்லாம் மனமகிழ்ச்சி
துலங்கி நிற்க
இணைந்து கொண்ட தம்பதிகள்
பெயர் பொறித்து வாழ்ந்திருக்க
இல்லறமே நல்லறமாய் எந்நாளும்
மகிழ்ந்திருக்க
செல்வங்கள் பல கண்டு செழிப்போடு வாழ்ந்திருக்க
பெற்றவரும் உற்றவரும் பெருமகிழ்ச்சி
கண்டிருக்க
இணைந்திருக்கும் தம்பதிகள் என்றும் இனிதாக வாழ்ந்திருக்க
மங்களமே மணவாழ்வு உங்கள்
அன்பு மனம் காணட்டும் பெருவாழ்வு
வாழ்ந்திருங்கள் வளமுடன்
என்றும் வாழ்த்துக்கள்அன்புடன்
சந்தோஷம் எங்களோடு என்றும்
சந்தோஷம் தொடரட்டும் உங்களோடு
என்று வாழ்த்தி நிற்கிறோம் .

பகிரவும்...