திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம்: நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியிலுள்ள தொல்பொருள் திணைக்களம் உரிமை கோரும் பிள்ளை யார் கோயில் அமைந்துள்ள பிரதேசத்தில் கோயில் அல்லது பெளத்த விகாரை அமைப்பதற்கோ அல்லது திருத்த வேலைகள் செய்வதற்கோ வழக்கின் தீர்ப்பு கிடைக்கும் வரை தடை உத்தரவை திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணை முடிவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வெந்நீர் ஊற்று பகுதிக்கு விஜயம் செய்பவர்களுக்கு மட்டும் டிக்கட் விற்பனை செய்யவும் தொல்பொருள் திணைக்களத்துக்கு அனுமதியும் நீதிபதி யால் வழங்கப்பட்டது.
மேலும் இம்மாதம் 22ஆம் திகதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.