Main Menu

மாலைதீவு – இலங்கைக்கு இடையிலான இராணுவ உறவு குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான மாலைதீவு தூதரகத்தின் தூதுவரான ஓமர் அப்துல் ராஷக் இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ உறவு முறைகளை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் இருவர்களது சந்திப்பினை நினைவு படுத்தும் முகமாக இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இறுதியில் தூதுவர் அவர்கள் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.

இச்சந்திப்பின் போது மாலைதீவு தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி லெப்டினன்ட் கொமாண்டர் இஷ்மைல் நசீரும் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...