Main Menu

தவறுகளை நிவர்த்தி செய்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் கட்டியெழுப்பப் படும்-நாமல்

எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன ஆனால் மக்களுக்காக எடுக்கப்பட்ட சில முடிவுகள் தவறானவை பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் மக்களைச் சிந்தித்து எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் தவறானவை எனவும், அந்தத் தவறுகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

இதேவேளை எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் 350 ரூபாவுக்கு மக்களுக்கு உரம் வழங்கினார் ஆனால் கோட்டாபய ராஜபக்ஸ, உர இறக்குமதியை நிறுத்தி இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்த தீர்மானித்தார் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

பகிரவும்...