Main Menu

தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்

ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என, இந்திய நாடாளுமன்றத்தில் கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அகதி முகாம்களில் அவதியுறும் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் இந்திய நாடாளுமன்றில் கவனயீர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை ரவிக்குமார் மேற்கோள்காட்டியிருக்கிறார்.

ஆதவன் வானொலியில் கடந்த மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற தமிழகத்தில் உள்ள ஈழத்து அகதிகள் தொடர்பான சிறப்பு வாரம் ஒரு வலம் நிகழ்ச்சியில் நேரலையாக பங்கேற்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான ரவி ரவிக்குமார் ஈழத் தமிழர்கள் தொடர்பான கவன ஈர்ப்பை மத்திய அரசுக்கு வலியுறுத்தப் போவதாக உறுதி அளித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

பகிரவும்...