Main Menu

பிரேசில் சிறைச் சாலையில் பாரிய கலவரம் – 57 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் பாரா மாநிலத்தின் அல்டமிரா நகரில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் நேற்று பாரிய கலவரம் இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட இந்த பயங்கர கலவரத்தில் சுமார் 57 பேர் உயிரிழந்ததாக சிறைத்துறை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதில் 16 பேரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறையின் சுவர் வழியாக வீசப்பட்டுள்ளன.

அத்துடன், 41 பேர் மெத்தைகள் எரிக்கப்பட்டதால் வெளியான நச்சு வாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரேசிலில் சிறைச்சாலை கலவரம் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றது. இருப்பினும் இந்த கலவரம் மிகவும் மோசமானது என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னதாக, கடந்த மே மாதம் அமேசான் நகரிலுள்ள சிறையில் நடைபெற்ற கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...