Main Menu

தமிழகத்தில் அடுத்த மாத நடுப்பகுதியில் 2000 மினி கிளினிக்குகள் செயற்பாட்டுக்கு வரும் – முதலமைச்சர்

டிசம்பர் 15 ஆம் திகதிக்குள் தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் செயற்பாட்டுக்கு வரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிய இரண்டு நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னையில் முடிச்சூர், வேளச்சேரி போன்ற  தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்தார்.

திருமண நிகழ்ச்சிகள், கோயில்கள், கடைகளுக்கு செல்லும் போதும் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் இருப்பதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நோயை கட்டுப்படுத்த முடியாது என்றார்.

பகிரவும்...