தனது மகனை இராணுவத் தளபதியாக்கினார் உகண்டா ஜனாதிபதி
உகண்டா ஜனாதிபதி யோவேரி முசவேனி தன் மகனை அந்நாட்டின் இராணுவத் தளபதியாக நியமித்துள்ளார்.
1986 ஆம் ஆண்டு முதல் தடவையாக அதிகாரத்தைக் கைப்பற்றிய யோவேரி முசவேனி, 6 தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவாகியவர்.
தனக்கு பின் மகன் ஜெனரல் முஹுஸி கெய்ரேருகபாவை ஜனாதியாக்குவதற்கு முசவேனி தயாராகி வருகிறார் என ஊகங்கள் நிலவின.
இந்நிலையில், முஹுஸி கெய்னேருகபாவை இராணுவத் தளபதியாக ஜனாதிபதி முசவெனி நியமித்துள்ளார் என உகண்டா பாதுகாப்பு அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.